ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

 

ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 24 லட்சத்து  41 ஆயிரத்து 738 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 020 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 88 ஆயிரத்து 196 பேர்.

ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

ரஷ்ய கொரொனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

கடந்த சில வாரங்களுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் V மருந்தைக் கொண்டு வரும் முயற்சியில் ரஷ்யா மும்முரமாக இறங்கியது. ஸ்புட்னிக் V வின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் V மருந்தைச் செலுத்தும் பணியில் உள்ளது.

இப்போது தற்போது ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் விற்பனை வந்துவிட்டது ஸ்புட்னிக் V. இந்தத் தடுப்பூசியை முதல் கட்டமாக கொரோனா பணிகளில் பங்கேற்று வரும் முன்கள பணியாளர்களுக்கும், வயது முதியவர்களுக்கும் அளிக்க முடிவெடுத்துள்ளது.