பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் குழு திடீர் தாக்குதல் நிகழ்த்தினர். இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தீவிரவாதிகளும், வர்த்தக தளத்திலுள்ள போலீசாரும் சண்டையிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் கட்டிடத்தை கையெறி குண்டுகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு#karachi #pakistan #terrorist pic.twitter.com/ZXJsg0S3Zt
— Top Tamil News (@toptamilnews) June 29, 2020
இந்த கட்டிடம் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது மற்றும் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியும், கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாதுகாப்பு காவலரும் இந்த திடீர் தாக்குதலால் காயமடைந்துள்ளனர். மேலும் பங்குச் சந்தைக்குள் பலரும் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. அவர்களை மீட்கும் நோக்கில் போலீசார் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.