மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
மியான்மரில் இன்று காலை 11.50 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவானது. மீண்டும் 12 நிமிட இடைவெளியில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவானது. இதனால் மக்கள் மிகுந்த பீதி அடைந்ததோடு, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.
பாங்காங்கில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.