பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!
Jul 17, 2020, 10:13 IST1594961038000
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை ரிக்டர் அளவில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதனால் அங்கு கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட சேதங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.