பாகிஸ்தானில் ஒரேநாளில் 6825 பேருக்கு கொரோனா பாதிப்பு – 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழப்பு

 

பாகிஸ்தானில் ஒரேநாளில் 6825 பேருக்கு கொரோனா பாதிப்பு – 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரேநாளில் 6825 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று ஒரேநாளில் 6,825 பேருக்கு அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் 1,39,230 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இதுவரை பாகிஸ்தானில் 2,632 பேர் இறந்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரேநாளில் 6825 பேருக்கு கொரோனா பாதிப்பு – 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழப்பு

இதுவரை மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 51,735-ஐ எட்டியுள்ளது. இன்னொருபுறம் பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய இரண்டு பெரிய மாகாணங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தலா 50,000 தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 29,546 பேர் உட்பட இதுவரை பாகிஸ்தானில் 868,565 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.