கிரீஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.

 
கீரீஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.


கிரீஸ் நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரெயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலியானவர்களின்  எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு நேற்று முன்தினம் இரவு, 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே ரயில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தபோது,  எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்பாராதவிதமாக  அதே தண்டவாளத்தில் வந்தது.  இதில் அதிவேகமாக  வந்த சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  இதில்  பல பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள வயலில் விழுந்தன. முன்னால் இருந்த  சில பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. 

கீரீஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.

அத்துடன் பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் எழுந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  100க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் மற்றும்  பேரிடர் மீட்பு குழுவினர்  மீட்பு பணியில் இறங்கினர்.  நள்ளிரவு நேரம் என்பதாலும், விபத்து பகுதி முழுவதும்  புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் மீட்பு பணிகள் கடும் சவாலானது.  இருப்பினும்  பிளாஸ் லைட்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.  முதலில் இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 26 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.  

இந்நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் பலத்ஹ காயங்களுடன் மீட்கப்பட்ட  60 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மீட்கப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,   6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.