நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்! ஏற்கனவே 50 பேர் பலி...!
நேபாள நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக காலை 6.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குழுங்கின. இதனால் பீதி அடைந்த அந்நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கம் நேபாளம் எல்லையையொட்டி உள்ள இந்திய மாநிலங்களான பீகார், சிக்கிம் மற்றும் டெல்லியின் சில பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேபாள நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேபாளம் - திபெத் எல்லையில், இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது.