சிலி காட்டுத்தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 112ஆக அதிகரிப்பு
Feb 5, 2024, 09:35 IST1707105938778
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/76170c6a0b9e83a00742248bf30edbaf.webp)
சிலி நாட்டின் பல்பரை சோ பகுதியில் வனப்பகுதியில் நேற்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென காட்டு தீ பற்றி எரிந்தது இதில் சுமார் 1100 வீடுகள் தீக்குரையாகின. நூற்றுக்கணக்கான கார்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
கடந்த மூன்று நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் இந்த தீயை விமானங்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீ பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் நெருங்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.