இலங்கை அதிபா் தோ்தல் - ரணில் உள்பட 4 போ் போட்டி

 
srilanka

இலங்கை அதிபரை தேந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட 4 பேர் போட்டியிடவுள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.  இதனை தொடர்ந்து இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

Ranil Wickremesinghe - ரணில் விக்ரமசிங்கே


  
இந்நிலையில், அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர். தோ்தலுக்கு முந்தைய தினம் வேட்புமனுக்கள் பெறப்படும். புதிய அதிபராக தேர்வு செய்யப்படுபவர் கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை பதவி வகிப்பார்கள். 225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக உறுப்பினா்கள் உள்ளனா். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு உறுப்பினா் கூட இல்லை. இந்த தோ்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக இலங்கை பொதுஜன பெரமுன கட்சி அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.