இலங்கையின் அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே

 
ranil

நடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக்கொண்டார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். பின்னர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.  

ranil

இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.  .புதிய அதிபருக்கான தேர்தலில்,  ரணில் விக்ரமசிங்கே,  இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்திருந்த நிலையில், 134 வாக்குகள் பெற்று இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். டல்லாஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரகுமார திசாநாயகே 3 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். 

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரகாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் படி இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவ்விப் பிரமாணம் செய்து வைத்தார்.