இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் - அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்..

 
Ukraine president zelensky

உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.  

இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் - அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்..

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி  மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய  போர் கடந்த  8 மாதங்களாக நீடித்து வருகிறது.  பெரும் படைகளை கொண்டு ரஷ்யா தாக்கி வரும் நிலையில்,  இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று பேசுகையில்,  உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.  அவற்றுள் 60-70 சதவீதம் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எற்றிச்சென்ற 170க்கும் அதிகமான உக்ரைன் சரக்குக் கப்பல்கள் துருக்கியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  

russia

மேலும், அங்குள்ள உக்ரைன் சரக்குக் கப்பல்களில் ரஷ்யா வேண்டுமென்றே தேவையற்ற ஆய்வுகள் செய்து அதன்மூலம் கப்பல்கள் செல்வதை தாமதப்படுத்துகிறது என்றார்.  ரஷ்யா இந்த கப்பல்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிய ஜெலன்ஸ்கி, முன்னதாகவே ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆதரவு அளிக்காமல் இருப்பதால் ஈரானுடன் ரஷ்யா ராணுவ உறவுகளை பலப்படுத்தி வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில்  இப்போது  உக்ரைனும் இஸ்ரேலும்  முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று தெரிவித்தார்.