அர்ஜெண்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

 
நிலநடுக்கம்

அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இந்த நிலநடுக்கமானது திடீரென அதிகாலை  3.39 மணியளவில் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவான நிலையில், இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உணரப்பட்டது.  இதனால் அந்தப்பகுதியில்  வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அத்துடன்  வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு சேதமடைந்தன.  இதனையடுத்து   தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  

அர்ஜெண்டினா நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால்  பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதோடு,  சில இடங்களில்  கட்டிடங்களும்  இடிந்து சேதமடைந்தன. நில நடுக்கத்தின்போது  வீடுகள் அதிர்ந்தது, பொருட்கள் உருண்டு விழுந்தது,  கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டாலும்,   சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. சேதமடைந்த இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.