தாயின் தூக்கு தண்டனை- நாற்காலியை எட்டி உதைத்து தண்டனையை நிறைவேற்றிய மகள்

 
ii

 கணவனை கொண்ற பெண்ணுக்கு ஈரானில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.  சொந்த மகளே நாற்காலியை எட்டி உதைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்.

ஈரான் நாட்டில் தனக்கு விவகாரத்து வழங்க மறுத்ததால் மரியம்  என்கிற பெண் தனது கணவரை கொலை செய்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மரியம் தந்தை இப்ராகிம் கைது செய்யப்பட்டிருந்தார் . 

pp

 மரியம், இப்ராஹிம் இருவரும் கைது செய்யப்படுவதற்கு முன்பு 13 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் இறந்து விட்டதாக தெரிவித்து அவரது ஆறு வயது சிறுமி தனது அப்பாவின் தாத்தா பாட்டியுடன் அழைத்துச் செல்ல விட்டுவிட்டார். 

 ஈரானில் இஸ்லாமிய சட்டத்தின் மீது கொலையாளியின் தண்டனையை அரசு தீர்மானிப்பது விட கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள்தான் தீர்மானிக்கின்றனர்.   இதை தொடர்ந்து நடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மரியம், இப்ராகிம் சிறை தண்டனை மரண தண்டனைக்கு மாற்றப்பட்டது.  தெரியாத காரணங்களுக்காக தூக்கிலிடப்படுவது தாமதமானது.

 மரியத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது அடுத்து மரியத்தின் மகள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு தூக்கு மேடையில் நின்ற அம்மாவின் காலடியில் இருந்த நாற்காலியை உதைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.  அதன்படியே அவரும் அந்த நாற்காலியை உதைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளார்.  மரியம் தூக்கிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.   மரியத்தின் தந்தை இப்ராஹிம் தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.  இந்த ஆண்டு ஜூன் மாதம் இப்ராகிம் தனது மகள் இருந்த அதே சிறையில் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.