பெரு நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

 
Monkeypox death

பெரு நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பெரு நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருவில் 300க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்காவிற்கு வெளியே குரங்கம்மையால் உயிரிழக்கும் மூன்றாவது நபர் இவர் ஆவார். ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரும், பிரேசில் நாட்டில் ஒருவரும் குரங்கம்மையால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.