பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் ஆழ்ந்த கவலையில் மூழ்கிய இங்கிலாந்து
இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாங் அரண்மனையிலிருந்து செய்திகள் பரவுகின்றன. இதனால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தகவல்.
இங்கிலாந்து மகாராணி ராணி எலிசபெத். 96 வயதாகும் அவர் இங்கிலாந்து நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாங் மாளிகையில் அரண்மனையில் வசித்து வருகிறார். வேல்ஸ் இளவரசர், கமீலா , கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோரும் மகாராணியுடன் வசித்து வருகின்றனர் .
ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திடீர் உடல் நலக்குறைவினை அடைத்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணி எலிசபெத்திற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டு வந்தார் ராணி எலிசபெத். இந்த நிலையில் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன .
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அந்நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ராணி எலிசபெத் விரைவில் நலம் பெற வேண்டும் என்று உலகத் தலைவர்கள் பலரும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் மூழ்கி உள்ளது என்று கூறியிருக்கிறார்.
The whole country will be deeply concerned by the news from Buckingham Palace this lunchtime.
— Liz Truss (@trussliz) September 8, 2022
My thoughts - and the thoughts of people across our United Kingdom - are with Her Majesty The Queen and her family at this time.