இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு

 
curfew

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பகல் 12 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார்.  மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுருந்தார். மேலும், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுருந்தார்.

இருந்த போதிலும் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கொழும்புவில் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பகல் 12 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.