உலகம் முழுவதும் தொடர்ந்து 5வது வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - WHO

 
who

உலகம் முழுவதும் தொடர்ந்து 5வது வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக லக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவால்ல் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. கொரோனாவால் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. 

corona

இந்நிலையில், உலகம் முழுவதும் தொடர்ந்து 5வது வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக லக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 57 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 9,800 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா் என்றும் கொரோனா நெருக்கடியிலிருந்து உலகம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றும், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் போதிய முனைப்பு காட்டுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் இதுவரை 56.51 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 63.81 லட்சமாக உள்ளது. இதேபோல் உலகில் 53.67 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.