உலகளவில் 3 கோடி… இந்தியாவில் 50 லட்சம் – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

 

உலகளவில் 3 கோடி… இந்தியாவில் 50 லட்சம் – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

செப்டம்பர் 15-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 94 லட்சத்து  45 ஆயிரத்து 688 பேர்.  3 கோடியை  விரைவாக நெருங்கி வருகிறது.

உலகளவில் 3 கோடி… இந்தியாவில் 50 லட்சம் – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 12 லட்சத்து 79 ஆயிரத்து 833 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 32 ஆயிரத்து 744 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 72,33,111 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

உலகளவில் 3 கோடி… இந்தியாவில் 50 லட்சம் – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 67,49,289 பேரும், இந்தியாவில் 4,930,236 பேரும், பிரேசில் நாட்டில்  4,349,544 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

உலகளவில் 3 கோடி… இந்தியாவில் 50 லட்சம் – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

அமெரிக்காவில் 38,072 பேரும், பிரேசிலில் 19,089 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 81,911 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

அமெரிக்காவை விட மூன்று மடங்கு புதிய நோயாளிகள் இந்தியாவில் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் 22 அன்று இந்தியாவில்  30 லட்சம் பாதிப்புகளைக் கடந்தது.  இன்னும் ஒரு மாதம்கூட முடியவில்லை. ஆனால், 50 லட்சத்தை நெருங்கி விட்டது. அநேகமான இன்று மாலை நேர அறிவிப்பில் 50 லட்சத்தை அடைந்துவிடக்கூடும், புதிய நோயாளிகளின் உயர்வு இதே நிலை நீடித்தால் உலகளவில் முதல் இடத்திற்கு இந்தியா சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.