விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு!

 

விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு!

கொரோனா சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியானது. அதனை தேமுதிக தலைமை உறுதிப்படுத்திய நிலையில், வழக்கமான பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விஜகாந்த்துக்கு கொரோனா உறுதியானதால் சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் சென்றுள்ளனர்.

விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு!

அப்போது, அவரது இல்லத்தில் இருந்த பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்ட எதிர்ப்பு தெரிவித்ததோடு, செல்போனில் பேசுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அதன் பிறகு செல்போனில் ஊழியர்கள் பேசிய பிறகு ஸ்டிக்கர் ஒட்டாமலேயே அங்கிருந்து சென்றுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைபடுத்தப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாகும் என்பது நினைவு கூரத்தக்கது.