பெற்றோர் வீட்டில் வசித்த பெண் -இரவில் பார்க்க வந்த மைத்துனர் -வயல்வெளியில் நடந்த கொடுமை
தாய் வீட்டில் வசித்த பெண்ணை, அவரின் மைத்துனர் பலாத்காரம் செய்துக் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் .
பீகாரின் பாட்னாவில் சிவான் மாவட்டத்தில் பர்ஹாரியா பகுதியில் ஒரு பெண் கல்யாணமாகி கணவரோடு வாழாமல் அவரின் பெற்றோரோடு கடந்த ஒரு வருடமாக வசித்துவந்தார் .அப்போது அந்த பெண்ணை அவரின் மைத்துனர் கடந்த சனிக்கிழமையன்று பார்க்க வந்தார் .பின்னர் அவர் அந்த வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கிவிட்டார் .
அன்று இரவு அந்த பெண் அங்குள்ள வயல்வெளி பக்கம் இயற்கை உபாதை கழிக்க சென்றார் .அப்போது அந்த பெண்ணின் மைத்துனர் அந்த பெண்ணை ஒரு சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தார் .பின்னர் அந்த பெண்ணை அந்த இருட்டில் வயல்வெளியில் பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் அவரை பலமுறை கழுத்தில் குத்தினார் .இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் அந்த வயல்வெளியிலேயே இறந்தார் .பின்னர் அந்த மைத்துனர் அவரின் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .மறுநாள் அந்த பகுதி மக்கள் பொலிஸில் தகவல் தெரிவித்தனர் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர் .பின்னர் அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்ததும் அந்த மைத்துனர் கைது செய்யப்பட்டார்.போலீசார் மைத்துனர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .