அடிக்கடி போன் பேசிய அண்ணி -கொலை வெறியான கொழுந்தனார் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

 

அடிக்கடி போன் பேசிய அண்ணி -கொலை வெறியான கொழுந்தனார் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

எந்நேரமும் போன் பேசிய அண்ணியை அவரின் மைத்துனர் கோடரியால் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது

அடிக்கடி போன் பேசிய அண்ணி -கொலை வெறியான கொழுந்தனார் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள நசிராபாத் பகுதியில் உள்ள மஜித்கர் கிராமத்தில் 35 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் கேதர் அஹிர்வார் என்ற பெண் அவரது கணவர் ரமேஷ் மற்றும் அவரின்  சகோதரர்,22 வயதான  சுனில் ஆகியோரோடு வசித்து வந்தார்.இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி எந்நேரமும் செல்போனில் பேசும் பழக்கம் இருந்துள்ளது .இது அந்த பெண்ணின் மைத்துனர் சுனிலுக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் தன்னுடைய அண்ணியிடம் இது பற்றி பலமுறை எச்சரித்துள்ளார் .

ஆனால் அதை கேட்காமல் அந்த பெண் எப்போதும் போனில் பேசிக்கொண்டிருந்தார் .இதே போல  கடந்த வாரம் அந்த பெண் அவரின் கணவர் இல்லாத நேரம் யாருடனோ போன் பேசுவதை பார்த்த சுனில் அங்கிருந்த ஒரு கோடரியை எடுத்து அந்த பெண்ணை வெட்டி சாய்த்தார் .இந்த தாக்குதலில்  அந்த பெண் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார் .அதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை  அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த சுணிலை  வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்