பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி!

 

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி!

கோவை

பொள்ளாச்சி அருகே வளைவில் திரும்பியபோது கார் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி திலகவதி. இவர் நேற்று பொள்ளாச்சியை சேர்ந்த உறவினர் கவுசல்யா உள்ளிட்டோருடன் காரில் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காரை கவுசல்யாவின் மகன் முகேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி!

பொள்ளாச்சி அருகே சென்றபோது வளைவில் திரும்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், காரில் அமர்ந்திருந்த திலகவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கவுசல்யா உள்ளிட்ட 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் முகேஷிடம் விசாரித்து வருகின்றனர்.