“பொங்கலன்னைக்கு கூடவா பொம்பளைங்கள தேடி அலைவீங்க” -பொங்கல் வைக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“பொங்கலன்னைக்கு கூடவா பொம்பளைங்கள தேடி அலைவீங்க” -பொங்கல் வைக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி


பொங்கல் தினத்தன்று புனித நீராடிய பெண்ணை இருவர் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது .

“பொங்கலன்னைக்கு கூடவா பொம்பளைங்கள தேடி அலைவீங்க” -பொங்கல் வைக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி


ஒடிசாவின் பாரிபாடா நகரில் மகர சங்கராந்தி நிகழ்ச்சியில் ஒரு 19 வயதான பெண் கலந்து கொள்ள தன்னுடைய சகோதரியுடன் சென்றார் .கடந்த வியாழக்கிழமை அவரின் ஊரில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .அதனால் அந்த பெண் தன்னுடைய பத்து வயது சகோதரியுடன் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றார் .அப்போது அந்த பெண்களை அந்த ஊரை சேர்ந்த இருவர் பின் தொடர்ந்து வந்தார்கள் .பிறகு ஆற்றங்கரையில் தனது சகோதரியை காவலுக்கு நிற்க வைத்து விட்டு அந்த பெண் ஆற்றின் மறுபக்கம் குளிக்க சென்றார் .
அப்போது அங்கு வந்த இருவர் அந்த பெண்ணை அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான புதரின் அருகில் தூக்கி சென்றார்கள் .பிறகு இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார்கள் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அழுதுகொண்டே வந்து ஆற்றின் கரையில் நின்ற தனது சகோதரியிடம் நடந்த சம்பவத்தை கூறினார் .
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .பிறகு அனைவரும் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் அந்த குற்றவாளிகள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து ,சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அந்த பாலியல் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .பிறகு அந்த பலாத்காரத்துக்குள்ளான அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .பொங்கல் தினத்தன்று இந்த சம்பவம் நடந்தால் அந்த பகுதியில் புனித நீராடும் மக்களிடிடையே பீதியை உண்டாக்கியுள்ளது .

“பொங்கலன்னைக்கு கூடவா பொம்பளைங்கள தேடி அலைவீங்க” -பொங்கல் வைக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி