நாமக்கல் அருகே மழையில் சுவர் இடிந்து விழுந்ததில், பெண் பலி!

 

நாமக்கல் அருகே மழையில் சுவர் இடிந்து விழுந்ததில், பெண் பலி!

நாமக்கல்

நாமக்கல் அருகே கனமழையால் மாட்டுகொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த தேவராயபுரம் சிங்களம்கோம்பை பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மனைவி பார்வதி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென கனமழை பெய்ததால், அவர் தோட்டத்தின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் ஒதுங்கி நின்றிருந்தார்.

நாமக்கல் அருகே மழையில் சுவர் இடிந்து விழுந்ததில், பெண் பலி!

அப்போது, வீசிய சூறாவளி காற்று காரணமாக கொட்டகையின் மீது மரம் சாய்ந்தது. அதில், மாட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரா மற்றும் அகிலா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.