குப்பைக்கு தீ வைத்தபோது ஆடையில் தீ பற்றியதில் இளம்பெண் பலி!

 

குப்பைக்கு தீ வைத்தபோது ஆடையில் தீ பற்றியதில் இளம்பெண் பலி!

தஞ்சை

திருவையாறு அருகே குப்பைக்கு தீ வைத்தபோது ஆடையில் தீப்பற்றியதில் இளம்பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ஶ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரூபேஷ்பாபு. இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிரியா தனது வீட்டின் முன் குவித்து வைத்திருந்த குப்பைகளை தீ வைத்து எரிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது.

குப்பைக்கு தீ வைத்தபோது ஆடையில் தீ பற்றியதில் இளம்பெண் பலி!

இதனால் பிரியாவின் அலறி துடிக்கவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ப்ரியா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவையாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளில் பிரியா உயிரிழந்ததால், இந்த சம்பவம் குறித்து தஞ்சை ஆர்.டி.ஓ வேலுமணி விசாரித்து வருகின்றார்.