கைகால்கள் கட்டப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் உடல்!

 

கைகால்கள் கட்டப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் உடல்!

ஹைதராபாத்தின் சுன்னம் செரு என்ற ஏரியில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலம் ஒன்றை போலீசார் கண்டறிந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அடையாளம் தெரியாத நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏரியில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பெண்ணின் கைகால்கள் துணியால் கட்டப்பட்டு மிதந்துள்ளது.

கைகால்கள் கட்டப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் உடல்!

இதுகுறித்து பேசிய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ரெட்டி, “உள்ளூர்மக்கள் தண்ணீரில் மிதக்கும் ஒரு உடலைக் கண்டு போலீசிற்கு தகவல் கொடுத்தனர். மீட்டபோது அது ஒரு பெண்ணின் சடலம் என்று தெரிந்த து. பெண்ணின் கைகால்கள்துணியால் கட்டப்பட்டு உடல் ஒரு பிளாஸ்டிக் அட்டையில் மூடப்பட்டிருந்தது. இறந்த நபர் யாரென்று இது வரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.