கோவையில் வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு… கொலையா? என போலீசார் விசாரணை!

 

கோவையில் வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு… கொலையா? என போலீசார் விசாரணை!

கோவை

கோவை மாவட்டம் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் நித்யா (40). இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவர் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் திருணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நித்யாவின் செல்போனுக்கு, அவரது தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் நித்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கோவையில் வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு… கொலையா? என போலீசார் விசாரணை!

அப்போது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே இருந்து துற்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அவர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துச்சென்று பார்த்துள்ளார். அப்போது, நித்யா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் தகவலின் பேரில் வடவள்ளி போலீசார், நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 21ஆம் தேதி செந்தில்குமார் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக மதுஅருந்தி விட்டு இறந்து போனது தெரியவந்தது. இதனை அடுத்து, செந்தில் மரணத்திற்கும், நித்யாவின் இறப்புக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.