பைக்கில் புடவை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் : ஆயுதபூஜை பொருட்கள் வாங்க சென்ற போது நேர்ந்த சோகம்!

 

பைக்கில் புடவை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் : ஆயுதபூஜை பொருட்கள் வாங்க சென்ற போது நேர்ந்த சோகம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேல் ஆதனூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் ஆயுத பூஜையையொட்டி தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் திட்டக்குடிக்கு சென்றனர்.

பைக்கில் புடவை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் : ஆயுதபூஜை பொருட்கள் வாங்க சென்ற போது நேர்ந்த சோகம்!

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும்போது பெருமுளை கிராமம் அருகே சுகந்தியின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து சுகந்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

பைக்கில் புடவை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் : ஆயுதபூஜை பொருட்கள் வாங்க சென்ற போது நேர்ந்த சோகம்!

உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.