“கண்டபடி லீவு எடுக்கிறே ,என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறே” -பள்ளியிலேயே டீச்சரை சுட்ட வாத்தியார்

 

“கண்டபடி லீவு எடுக்கிறே ,என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறே” -பள்ளியிலேயே டீச்சரை சுட்ட வாத்தியார்

ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் 35 வயது பெண் ஆசிரியை தனது ஆண் சக ஊழியரால் அந்த பள்ளி வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் .

“கண்டபடி லீவு எடுக்கிறே ,என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறே” -பள்ளியிலேயே டீச்சரை சுட்ட வாத்தியார்


உத்திரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தின் பக்காரியா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 35 வயதான ஆரத்னா ராய் என்ற பெண் ஆசிரியரும் தனது ஆண் சகாவான அமித் கவுசால் என்ற ஆசிரியரோடு பணியாற்றினார் .இருவருக்கும் அடிக்கடி லீவு எடுப்பது தொடர்பாகவும் ,வருகை பதிவேடு தொடர்பாகவும் தகராறு வருமாம் .இதனால் அடிக்கடி இருவரும் பள்ளி வளாகத்திலேயே மோதி கொள்வார்களாம் .அதை பல ஆசிரியர்களும் ,தலைமை ஆசிரியரும் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்கள் .ஆனால் அவர்களின் பேச்சை மீறி இருவருக்குள் மீண்டும் மீண்டும் மோதல் வந்துள்ளது
கடந்த சனிக்கிழமை பகலில் மீண்டும் அந்த வருகை பதிவேடு சம்பந்தமாக இருவருக்கும் வாக்கு வாதம் நடந்துள்ளது .அப்போது திடீரென அந்த ஆசிரியர் கசவுசால் தன்னோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்த அந்த பெண் ஆசிரியை மீது சுட்டார் .இதனால் துப்பாக்கி குண்டுகள் அவரின் நெஞ்சை துளைத்தன .
இதனால் பலத்த காயமுற்ற அந்த ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே இறந்துவிட்டார்.அதே நேரத்தில் அந்த ஆசிரியையை சுட்ட கவுசல் குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியரை கைது செய்தார்கள் . மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர்.

“கண்டபடி லீவு எடுக்கிறே ,என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறே” -பள்ளியிலேயே டீச்சரை சுட்ட வாத்தியார்