கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்த கணவரின் நண்பர்கள் -மயக்கமடைந்த மனைவி -அடுத்து நடந்த அதிர்ச்சி

 

கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்த கணவரின் நண்பர்கள் -மயக்கமடைந்த மனைவி -அடுத்து நடந்த அதிர்ச்சி


ஒரு கணவரின் நண்பர்களால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்த கணவரின் நண்பர்கள் -மயக்கமடைந்த மனைவி -அடுத்து நடந்த அதிர்ச்சி


உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு கணவன் தன்னுடைய நண்பர்கள் பாப்லூ மற்றும் லோகேஷ் ஆகியோரை அடிக்கடி வீட்டிற்கு கூட்டிவருவார் .அப்போது அவர் தன் மனைவி முன்னாடி அமர்ந்து வீட்டில் சீட்டு விளையாடுவதும் ,குடிப்பதுமாக இருந்தார் .அப்போது அவரின் நண்பர்களும் அவரோடு சேர்ந்து கொண்டு வீட்டில் குடித்து கும்மாளமடிப்பார்கள் .
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கணவரின் இரு நண்பர்கள் பாப்லூ மற்றும் லோகேஷ் ஆகியோர் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர் .அதன் பிறகு அந்த கூல் ட்ரிங்ஸை அவரின் மனைவியிடம் கொடுத்து குடிக்க சொன்னார்கள் .அதை வாங்கி குடித்த அந்த மனைவி சிறிது நேரத்திலேயே மயக்கமானார். அதன் பிறகு அந்த மனைவியை இரு நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர் .பிறகு அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர் .அதன் பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தனர் .இந்த விஷயத்தை அந்த பெண் தன்னுடைய கணவரிடம் கூறியபோது அவர் அந்த நண்பர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.அதன் பிறகு அந்த நண்பர்கள் அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்கள் இதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் உட்பட பாப்லூ மற்றும் லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர்

கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்த கணவரின் நண்பர்கள் -மயக்கமடைந்த மனைவி -அடுத்து நடந்த அதிர்ச்சி