“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .

 

“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .

அடிக்கடி விடுமுறைக்காக அத்தை வீட்டுக்கு வந்த உறவுக்கார பெண்ணை அந்த வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமான அந்த பெண்ணை போலிஸார் தலையிட்டு கல்யாணம் செய்ய வைத்தனர் .

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பட்வாராவில் வசிக்கும் 19 வயதான ஒரு இளம் பெண்

“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .

2019 நவம்பரில் குர்ஜா தேஹாட் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார் .அப்போது அந்த வீட்டிலிருக்கும் அத்தை மகன் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் கர்ப்பமுற்றார் .இந்த விஷயத்தை அந்த பெண் தன்னை பலமுறை பலாத்காரம் செய்த அத்தை மகனிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ந்து போன அவர் தன்னுடைய நண்பர்கள் சில பேரை துணைக்கு சேர்த்து கொண்டு அந்த ஊரிலிருக்கும் ஒரு பெண் மருத்துவரிடம் சென்று கருவை கலைக்க முயன்றுள்ளார் .

“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .

ஆனால் கரு ஐந்து மாதத்திற்கு மேல் வளர்ந்து விட்டதால் கலைப்பது சிரமம் என்று கூறியும் அவர்கள் கருவினை கலைக்க முயன்றுள்ளனர் .
இதனால் பயந்து போன அந்த பெண் தன்னுடைய பெற்றோர் உதவியுடன் போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பெண் மருத்துவர் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .

பிறகு சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர்
இதன் விளைவாக இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பட்வாராவிலுள்ள அவரது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்வதாக அந்த வாலிபர் உறுதியளித்ததாக போலீசார் தெரிவித்தனர்..