“போனை எடுத்ததுக்காக போட்டு தள்ளிட்டியே” -ஒரு தந்தைக்கு மகளால் நேர்ந்த நிலை

 

“போனை எடுத்ததுக்காக போட்டு தள்ளிட்டியே” -ஒரு தந்தைக்கு மகளால் நேர்ந்த நிலை

தன்னுடைய போனை ஒளித்து வைத்த தந்தையை அடித்து கொன்ற ஒரு மகளை போலீசார் கைது செய்தார்கள்

“போனை எடுத்ததுக்காக போட்டு தள்ளிட்டியே” -ஒரு தந்தைக்கு மகளால் நேர்ந்த நிலை


சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பெல்காஹ்னா தெஹ்ஸிலில் உள்ள காஞ்சன்பூர் கிராமத்தில் வசிக்கும் 58 வயதான மங்லு ராம் எனபவருக்கு சரஸ்வதி என்ற ஒரு மகளிருந்தார் .அந்த பெண் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை போன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த காதல் கல்யாணத்தில் அவரின் தந்தைக்கு விருப்பமில்லை .
அதனால் அந்தமகள் சரஸ்வதி தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையோடு கல்யாணமாகி போனதிலிருந்து மகள் மீது கோபமாக இருந்தார் .இந்நிலையில் ஜனவரி 23ம் தேதியன்று அவரின் மகளை அந்த பெண்ணின் கணவர் அவரின் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு போனார் .அப்போது அந்த தந்தை மங்லு ராம் அந்த மகளின் போனை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டார் .அதன் பிறகு அந்த பெண் சரஸ்வதி தன்னுடைய போனை வீடு முழுவதும் தேடி கிடைக்காததால் அவரின் தந்தையிடம் கேட்டார் .அப்போது தான்தான் அந்தப் போனை எடுத்து ஒளித்து வைத்தேன் என்று அவரின் தந்தை கூறினார் .அதனால் கோபப்பட்ட அவரின் மகள் அவரின் தந்தையை கட்டையாலும் .கல்லாலும் தாக்கி கொன்றார் .பின்னர் இறந்த தந்தையின் சடலத்தை வீட்டிலுள்ள தோட்டத்தில் அவரின் தாயாரோடு சேர்ந்து புதைத்தார் .இந்த காட்சியை அவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பார்த்து விட்டு ,போலிஸுக்கு தகவல் சொன்னார் .போலீசார் விரைந்து வந்து அந்த பெரியவரின் பிணத்தை தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு அவரை கொன்ற அவரின் மகள் சரஸ்வதியையும் ,அவரின் மனைவியையும் கைது செய்தார்கள்.மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் கூறினார்கள் .

“போனை எடுத்ததுக்காக போட்டு தள்ளிட்டியே” -ஒரு தந்தைக்கு மகளால் நேர்ந்த நிலை