திண்டுக்கல் அருகே செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

 

திண்டுக்கல் அருகே செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மரச்செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே மரச் செக்கு இயந்திரம் வைத்து, தொழில் செய்து வருகிறார். இரவது மனைவி மாரியம்மாள். இவர் நேற்று மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் கை செக்கு இயந்திரத்தில் சிக்கி கொண்டு துண்டானது.

திண்டுக்கல் அருகே செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

இதனால் வலி தாங்க முடியாமல் மாரியம்மாள் அலறி துடித்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எண்ணெய் ஆட்டியபோது செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.