வையம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பெண் பலி… மகளை காப்பாற்ற முயன்றபோது சோகம்!

 

வையம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பெண் பலி… மகளை காப்பாற்ற முயன்றபோது சோகம்!

திருச்சி

வையம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மகளை மீட்க முயன்ற பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் தத்தளித்த சிறுமி உள்ளிட்ட 2 பேரை, 8 வயது சிறுவன் போராடி மீட்டார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள துலுக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி ஓட்டுநர். இவரது மனைவி குணா (29). இவர்களுக்கு லித்திகா(8), நிதர்சன்(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை குணா வேலை முடிந்து, மகள் லித்திகாவுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, சிறுமி எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார்.

வையம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பெண் பலி… மகளை காப்பாற்ற முயன்றபோது சோகம்!

இதனால் அதிர்ச்சியடைந்த குணா, உடனடியாக கிணற்றில் குதித்து மகளை மீட்க முயன்றார். ஆனால் நீச்சல் தெரியாததால், மகளுடன் சேர்ந்து அவரும் தண்ணீரில் தத்தளித்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது 8 வயது மகன் லோஹித், கிணற்றில் குதித்து லித்திகா மற்றும் அவர்களை மீட்க முயன்ற மற்றொரு சிறுவனையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால், குணாவை இழுக்க முடியாததால், அவர் தண்ணீரில் மூழ்கினார்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, குணா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.