“முதலில் தாய் ,அடுத்து சகோதரி ,அடுத்து ….”ஒரு டாக்டரால் ஒரு குடும்பத்துக்கு நடந்த விபரீதம் .

 

“முதலில் தாய் ,அடுத்து சகோதரி ,அடுத்து ….”ஒரு டாக்டரால் ஒரு குடும்பத்துக்கு நடந்த விபரீதம் .


ஒரு டாக்டர் தனது தாய் மற்றும் சகோதரிக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்

“முதலில் தாய் ,அடுத்து சகோதரி ,அடுத்து ….”ஒரு டாக்டரால் ஒரு குடும்பத்துக்கு நடந்த விபரீதம் .


குஜராத் மாநிலம் கதர்கம் பகுதியில் உள்ள சகஜனாநாடு சொசைட்டியில் டாக்டர் தர்ஷனா என்பவர் தனது தாய், சகோதரி, சகோதரன் மற்றும் மைத்துனியுடன் வசித்து வந்தார். அந்த டாக்டர் தர்ஷனாவை நம்பி அவரின் தாயார் மஞ்சுளாபென் (59) மற்றும் அவரது சகோதரி ஃபல்குனி (28) ஆகியோர் இருந்தனர் ,அந்த டாக்டரின் வருமாணத்தில்தான் அவர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர் .
இந்நிலையில் அந்த டாக்டருக்கு வேலையில் அதிக மன அழுத்தம் இருந்துள்ளது .அதுவும் இந்த கொரானா காலத்தில் மிகவும் பணி சுமை இருந்துள்ளது .இதனாலும் மேலும் பல குடும்ப பிரச்சினைகளாலும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் .
ஆனால் அவரின் குடும்பத்தினர் அவரின் வருமானத்தை நம்பி இருந்ததால் தனக்கு பிறகு அவர்கள் வறுமையில் வாட நேரிடுமே என்று கவலை பட்டார் .அதனால் முதலில் அவர்களை கொன்று விட தீர்மாணித்தார் .அதன் படி கடந்த சனிக்கிழமை இரவு அவரின் தாய் மற்றும் சகோதரிக்கு விஷ ஊசி போட்டு கொன்றார் .ஆனால் அவரின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்றதால் அவர்கள் தப்பித்தனர் .பிறகு அந்த டாக்டர் தூக்க மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார் .பின்னர் இது பற்றி அவரின் மற்ற உறவினர்களுக்கு தெரிந்து அந்த டாக்ட்டரை ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து காப்பாற்றினர் .பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து,அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. டாக்டரின் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது,.