திண்டுக்கல் அருகே மகள் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை!

 

திண்டுக்கல் அருகே மகள் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மகள் இறந்த வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர்களது இளைய மகள் உமா மகேஸ்வரி, கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிவகாமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

திண்டுக்கல் அருகே மகள் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கண்ணன், மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, இதுகுறித்து அவர் ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.