“பணத்தோட வந்தால்தான் படுக்கைக்கு வரலாம்” -வரதட்சணை கொடுமையால் விரட்டப்பட்ட பெண்.

 

“பணத்தோட வந்தால்தான் படுக்கைக்கு வரலாம்” -வரதட்சணை கொடுமையால் விரட்டப்பட்ட பெண்.

வரதட்சணை குறைவாக கொண்டு வந்த தன்னுடைய மனைவியை, தனியே படுக்க வைத்தும், தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து அடித்து உதைத்தும் சித்திரவதை செய்த ஒரு கணவர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

உத்திரபிரதேச மாநில உமரியா கிராமத்தில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களின் 25 வயது மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு கடந்த வருடம் திருமணம் செய்து கொடுத்தனர் .அப்போதிலிருந்து அந்த பெண்ணை அந்த கணவன் வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளார் .இதனால் அந்த பெண்ணோடு குடும்பம் நடத்தாமல், அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளார் .மேலும் வீட்டிற்கு வெளியே தனியேதான் அவரை படுக்க வைப்பார்களாம் .இதனால் அந்த பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவார் .ஆனால் மீண்டும் சமாதானம் செய்து கூட்டி வருவார்களாம் .
இப்படி ஒரு நாள் வரதட்சணை கொடுமையின் உச்சமாக அந்த பெண்ணை அந்த கணவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு கரும்பு வயலுக்குள் இழுத்து சென்றுள்ளார்கள் .அங்கு அந்த பெண்ணை அவரின் கணவர் மற்றும் இரு நண்பர்கள் சேர்ந்து கொண்டு கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளார்கள் .இதனால் கடுமையான காயமுற்ற அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளார்கள் .பிறகு அந்த பெண்ணை அவரின் பெற்றோர் ஒரு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்த்து ,அவர் குணமடைந்தார் .அவர் இப்போது தன்னுடைய பெற்றோரோடு சேர்ந்து அந்த கணவர் மற்றும் அவரின் நண்பர்கள் மீது போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்று கொண்ட போலீசார் அந்த பெண்னுடைய கணவர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளார்கள் .

“பணத்தோட வந்தால்தான் படுக்கைக்கு வரலாம்” -வரதட்சணை கொடுமையால் விரட்டப்பட்ட பெண்.