2 குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது

 

2 குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது

திருவாடாணை அருகே குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணையை அடுத்த நாச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சோனியா என்ற மனைவியும், சந்தோஷ் சாய் (4) மற்றும் கிருத்திகேஷ் (1) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது

இந்நிலையில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறில், சோனியா குழந்தைகள் இருவரையும் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார். தகவலின் பேரில் குழந்தைகளின் உடலை மீட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் சோனியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குடும்ப தகராறில் குழந்தைகளை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார். இதனையடுத்து, அவரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Maalaimalar News: Pudukottai near elderly jewelry robbery 3 womans arrest