“உடலை கொடு கடனை பெறு ” -அழகியிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஐந்து பேர் நடத்திய டீலிங்

 

“உடலை கொடு கடனை பெறு ” -அழகியிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஐந்து பேர் நடத்திய டீலிங்

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிக்கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறிக்கொண்டு அவர்களை தேடி வரும் பெண்களை பலாத்காரம் செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்துள்ளார்கள்

டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மால்வியா நகரில் வசிக்கும் மனோஜ் சர்மா, ஷேக் சாராய், என்பவர்கள் உள்பட ஆறுபேர் தங்கிக்கொண்டு அங்குள்ள ஊடகத்தில் தாங்கள் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக விளம்பரம் கொடுத்தாளர்கள் .அதை பார்த்த சுற்றுலா வழிகாட்டி-டிக்கெட் முன்பதிவு முகவராக பணிபுரியும் ஒரு பெண், தன்னுடைய வியாபாரத்தை விரிவு படுத்த கடன் வாங்கலாம் என்று நினைத்து அந்த நபர்களை தேடி டெல்லியின் கொனாட் பிளேஸில் உள்ள அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமைஎன்று மாலை சென்றுள்ளார் .
அப்போது அந்த பெண்ணை பார்த்து அவரின் அழகில் மயங்கிய அந்த ஐந்து பேரும் அந்த பெண்ணிடம் தாங்கள் கடன் தருகிறோம் அதற்கு பதிலாக உன்னை எங்களுக்கு தர வேண்டும் என்று டீலிங் பேசியுள்ளார்கள் .ஆனால் அதற்கு சம்மதிக்காத அந்த பெண் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார் .ஆனால் அப்போது அந்த ஐந்து பேர் ,மற்றும் ஒரு பெண் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை அடித்து அந்த ஹோட்டலின் ரூமிற்குள் தள்ளி பலாத்காரம் செய்துள்ளார்கள் .இதனால் பாதிக்கப்ட்ட அந்த பெண் இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் உள்பட ஆறு பேர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கை பதிவு செய்து அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

“உடலை கொடு கடனை பெறு ” -அழகியிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஐந்து பேர் நடத்திய டீலிங்