மனைவியின் கை,கால்களை கட்டி, வாயை பொத்தி…. குளச்சலில் சைக்கோ கணவன் செய்த கொடூரச்செயல்

 

மனைவியின் கை,கால்களை கட்டி, வாயை பொத்தி…. குளச்சலில் சைக்கோ கணவன் செய்த கொடூரச்செயல்

உள்பக்கமாக பூட்டிய வீட்டுக்குள் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் இருந்த குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனபோது, ஒரு நடுத்தர வயதுப்பெண் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு, கை,கால்கள் கட்டப்பட்டிருந்தது. வாயும் கட்டப்பட்டிருந்தது.

இவர் இந்த வீட்டுப்பெண் தான் என்று அக்கம்பக்கத்தினர் சொன்னதும், கை,கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர் போலீசார். அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஆண் நபரை போலீசார் பிடித்தனர்.

மனைவியின் கை,கால்களை கட்டி, வாயை பொத்தி…. குளச்சலில் சைக்கோ கணவன் செய்த கொடூரச்செயல்

போலீஸ் விசாரணையில், அப்பெண் ஹெப்சிபாய்(40) என்பதும், அந்த ஆண் ஹெப்சிபாயின் கணவர் சுரேஷ் ராஜன்(53) என்பதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் விசாரித்ததில், சுரேஷ்ராஜன் – ஹெப்சிபாய் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த காரணத்தினாலேயே ஹெப்சிபாயை பல வருடங்களாக துன்புறுத்தி வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2ம்தேதி இரணியல் நீதிமன்றத்தில் ஹெப்சிபாய்க்கு இளநிலை உதவியாளர் வேலை கிடைத்திருக்கிறது. அதன்பிறகு சுரேஷ்ராஜனின் துன்புறுத்தல் அதிகமாகி இருக்கிறது. ஹெப்சிபாயை நாற்காலியில் உட்கார வைத்து, கை-கால்களை கட்டி, வாயையும் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறார் சுரேஷ் ராஜன். இது போதாது என்று காலில் அரிவாளால் வெட்டி இருக்கிறார். கத்தியால் குத்தியிருக்கிறார். கடைசியாக பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முயன்றபோதுதான், பலம் கொண்ட மட்டும் கத்தியதில், வாயில் கட்டப்பட்ட கட்டு விலகி, அலறல் சத்தம் வெளியே கேட்டிருக்கிறது என்பது தெரியவந்தது.

மனைவியின் கை,கால்களை கட்டி, வாயை பொத்தி…. குளச்சலில் சைக்கோ கணவன் செய்த கொடூரச்செயல்

இதையடுத்து சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

மனைவியின் கை,கால்களை கட்டி, வாயை பொத்தி, அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முயன்ற சைக்கோ கணவனின் செயல் கன்னியாகுமரி பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.