“அடிப்பாவி ,பேசிட்டிருக்கும்போதே கத்தியால் குத்திட்டியே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த நிலை

 

“அடிப்பாவி ,பேசிட்டிருக்கும்போதே கத்தியால் குத்திட்டியே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த நிலை


குடும்ப தகராறில் ஒரு கணவனை குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்ய தேடி வருகின்றனர்

“அடிப்பாவி ,பேசிட்டிருக்கும்போதே கத்தியால் குத்திட்டியே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த நிலை


ஹரியானா மாநிலம் குருகிராமின் ஜோதி பூங்கா பகுதியில் சச்சின் குமார் என்ற 40 வயதான நபர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார் .அவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வருகிறார் .இந்நிலையில் அவருக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .அதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்டுள்ளனர் .
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று இரவு அந்த கணவர் அவரின் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .அப்போது அவர் தன்னுடைய மனைவியை திட்டிக்கொண்டிருக்கும்போதே, அந்த பெண் அங்கு கிட்ச்சனிலிருந்த ஒரு கத்தியை எடுத்து அவரின் கணவரை குத்தினார் .இந்த தாக்குதலில் அந்த கணவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் .பின்னர் அந்த பெண் அங்கிருந்து தப்பி தன்னுடைய உறவினர் வீட்டிற்கு ஓடிவிட்டார் .அதன் பிறகு அந்த இறந்த நபரின் சகோதரர் சம்பவ இடத்திற்கு வந்தார் .அப்போது அவரின் சகோதரர் இறந்து கிடப்பதை பார்த்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .பின்னர் அங்கு இறந்து கிடந்த சச்சின் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு அந்தக் கணவனை கொலை செய்து விட்டு தலைமறைவான அந்த மனைவியை தேடி வருகின்றனர் .மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்