கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி!

 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியை சேர்ந்தவர் இராமன், கட்டிட தொழிலாளியான அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சத்தியா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். சத்யா அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வரும் வாகன ஓட்டுநர் இராமமூர்த்தி என்பவருக்கும் சத்யாவுக்கும் திருமணத்திற்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இராமன் கண்டித்து இராமமூர்த்தியுடனான உறவை கைவிட தனது மனைவிக்கு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார். இருந்த போதிலும் அவர்களது உறவு தொடர்ந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி!

இந்நிலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த இராமன் இறந்துவிட்டதாக அவரது மனைவி சத்தியா அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் இராமனின் உடலை எரியூட்டினர். இருந்தபோதிலும் இராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் இலட்சுமணன் நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட நாமக்கல் காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை நடத்தியனர். அப்போது சத்யா தனது கணவருக்கு இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து உறங்கிய பிறகு நள்ளிரவில் தனது கள்ளக்காதலன் இராமமூர்த்தியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கணவர் திடீரென உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த நாமக்கல் போலீசார் சிறையில் அடைத்தனர்.