மனைவி மீது சந்தேகம்- கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

 

மனைவி மீது சந்தேகம்- கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சந்தேகத்தால், கழுத்தை நெறித்தும், தலையணயால் அழுத்தியும் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

மனைவி மீது சந்தேகம்- கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

ஏனாதி கிராமத்தில் இன்று காலை மாடசாமி என்பவர் மனைவி ராதிகா மீதான சந்தேகத்தால் கழுத்தை நெறித்தும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்து உள்ளார். கொலையில் இருந்து தப்பிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப் பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மாடசாமியிடம் பேரையூர் போலீசார் விசாரித்ததில் தூரி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர், தன் மனைவியுடன் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக மாடசாமி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து மாடசாமியை பேரையூர் போலீசார் கைது செய்து, ராதிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.