கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்… ஆதரவற்ற நிலையில் 5 குழந்தைகள்!

 

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்… ஆதரவற்ற நிலையில் 5 குழந்தைகள்!

கோவை

கொரோனாவால் கணவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்ததால், அவர்களது 5 குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த சின்ன தடாகம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (54). பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாகராஜுக்கு உடல்நல குறைவு ஏற்படவே, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்… ஆதரவற்ற நிலையில் 5 குழந்தைகள்!

இதனால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இதனை அறிந்தால் அம்பிகா வேதனையடைவார் என கருதி குடும்பத்தினர், அவரிடம் சொல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் நாகராஜ் இறந்த தகவல் அம்பிகாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியில் அம்பிகா மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து தாய் – தந்தையை இழந்தால் அவர்களது 5 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வரும் நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு உதவிபுரிந்து வருவது சற்று ஆறுதலை அளித்து வருகிறது.