“மாஸ்க்கும் போடல ,தள்ளியும் நிக்கல” -அரசியல்வாதிகள் பேச்சை கேட்கும் அமெரிக்கர்களால் வேலையை விட்டு விலகும் டாக்டர்கள்.

 

“மாஸ்க்கும் போடல ,தள்ளியும் நிக்கல” -அரசியல்வாதிகள் பேச்சை கேட்கும் அமெரிக்கர்களால் வேலையை விட்டு விலகும் டாக்டர்கள்.

உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது .அங்கு இதுவரை 170000பேருக்கு மேல் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர் .இதனால் அங்கு பல நூற்றுக்கணக்கான டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் வேலையை விட்டு விலகி வருகிறார்கள் .இதனால் அங்கு சுகாதார பணியாளர் பற்றாக்குறையால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது .

“மாஸ்க்கும் போடல ,தள்ளியும் நிக்கல” -அரசியல்வாதிகள் பேச்சை கேட்கும் அமெரிக்கர்களால் வேலையை விட்டு விலகும் டாக்டர்கள்.

சமீபத்தில் அங்குள்ள சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பிரீமேன் இது பற்றி கூறும்போது ,அமெரிக்காவில் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அதிகமாக சுகாதார துறை விஷயத்தில் இருப்பதால்தான் இப்படி கொரானா இங்கு கோரத்தாண்டவம் ஆடிவருகிறது .லட்சக்கணக்கானோர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகியும், இன்னும் இந்நாட்டு மக்களுக்கு புத்தி வரவில்லை .மேலும் அவர்கள் மாஸ்க் போட மறுக்கிறார்கள் ,சமூக இடைவெளியுடன் இருக்க மறுக்கிறார்கள் .ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்றுகேட்டால் இதற்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறது என்று எங்களை பார்த்து கேட்கிறார்கள் .மேலும் அவர்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் இருப்பதால் இப்படி மாஸ்க் அணியாமலிருந்து நோயை மேலும் பரப்பி வருகிறார்கள் .இந்த சூழலில் இந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில் வேலை செய்ய முடியாமல் பல டாக்டர்களும் ,சுகாதார பணியாளர்களும் வேலையை விட்டு விலகி வருகிறார்கள் என்று அவர் கூறினார் .

“மாஸ்க்கும் போடல ,தள்ளியும் நிக்கல” -அரசியல்வாதிகள் பேச்சை கேட்கும் அமெரிக்கர்களால் வேலையை விட்டு விலகும் டாக்டர்கள்.