கொரானா பயமா ?உறவினர் பாசமா ?-சுரேஷ் ரெய்னா ஓடிவந்த மர்மம்

 

கொரானா பயமா ?உறவினர் பாசமா ?-சுரேஷ் ரெய்னா ஓடிவந்த மர்மம்

சிஎஸ்கே என்று சுருக்கமாக அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்க்கு ஐபிஎல் மேட்ச் ஆட சென்ற போது அங்கிருந்து பாதியிலேயே சுரேஷ் ரெய்னா திரும்பியது பல கேள்விகளை உண்டாக்கியுள்ளது .

கொரானா பயமா ?உறவினர் பாசமா ?-சுரேஷ் ரெய்னா ஓடிவந்த மர்மம்

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் தோனியின் நெருங்கிய நண்பர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரோடு சேர்ந்து கிரிக்கெட்டிலிருந்து இவரும் ஓய்வு பெற்றார் .’
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கட் மேட்ச் துபாயில் நடைபெற இருந்ததால் இருவரும் சிஎஸ்க்கே அணியில் சிறப்பாக விளையாடி நிறைய ரன்களை குவிப்பார்கள் எனறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து பாதியிலேயே நம் நாட்டுக்கு திரும்பினார் .
இதற்கு சிலர் அவரின் மாமா பஞ்சாப் மாநிலத்தில் சில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் அவரின் அத்தை மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலிருப்பதால் மனம் நொந்து போய் பாதியிலேயே விளையாட முடியாமல் வந்ததாகவும் கூறினார்கள் .
ஆனால் இன்னும் சிலர் சிஎஸ்க்கே அணி யிலிருக்கும் பலருக்கும் கொரானா தொற்றியுள்ளதால் தனக்கும் அது வந்து விடும் ,தனக்கு வந்தால் தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் வந்து விடுமென்ற பயத்தால் பாதியிலேயே கிளம்பி வந்து விட்டதாகவும் கூறினார்கள் .

கொரானா பயமா ?உறவினர் பாசமா ?-சுரேஷ் ரெய்னா ஓடிவந்த மர்மம்