சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அத்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

 

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அத்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

16 வயது சிறுவன் ஒருவன் தனது அத்தை தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக குழந்தைகள் நல அமைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சிறுவனின் அத்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அத்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த அந்த 16 வயது சிறுவன் தனது அத்தை தனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் வில்லிவாக்கம் வீட்டிற்கு வந்த குழந்தைகள் நல அமைப்பினர், அவனிடம் தீவிர விசாரணை செய்ததில் அச்சிறுவனுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் . அங்கு சிறுவன் அளித்த புகாரின் பேரில் அத்தைமீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்ய போலீசார் முற்பட்டபோது அவர் சொத்து தகராறில் ஏற்கனவே கடந்த 5ம் தேதியில் இருந்து சிறையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.