கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி – உலக சுகாதார அமைப்பு

 

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலகில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 50 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 20 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி – உலக சுகாதார அமைப்பு

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில், உலகில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பல பணக்கார நாடுகள் ஊரடங்கு மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.