நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்தது! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி….

 

நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்தது! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி….

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. அவரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் எல்லாம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச போலீசாலும் நித்தியை பிடிக்க முடியவில்லை.

நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்தது! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி….

அண்மையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், கைலாசா நாட்டிற்கு வர விரும்புவர்கள் தனியாக விசாஎடுக்கத் தேவையில்லை என்றும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவார விசா எடுத்தால் போதும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து கருடா என்ற விமானம் மூலம் அவர்கள் கைலாசாவிற்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் கூறினார்.

அந்தவீடியோவின் தொழில்நுட்ப ஐடியை ஆராய்ந்து பார்த்ததில், நித்தியானந்தா இருப்பது வணுவாட்டி என்ற தீவு. இது ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிலோமீட்டர் தொலைவிலும், அமெரிக்காவின் நார்த் கலிஃபோர்னியாவிலிருந்து 540 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. தண்ணீரே இல்லாத தீவான வணுவாட்டியில் எரிமலைகள் ஏராளம். எந்த நாட்டில் இருந்தும் வணுவாட்டியிலுள்ள வங்ககளில் பணம் போடலாம் என்பதால் அதைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை அங்கு வைத்துள்ளாராம் நித்யானந்தா. வணுவாட்டியைதான் கைலாசா என அலப்பறை கொடுத்து வருகிறார் நித்தி. இதற்கு பிறகாவது நித்தியானந்தாவை பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவுள்ளது.