‘வயிறு எரிந்தால் நாசமாக போவீங்க’ : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ஆவேசம்!!

 

‘வயிறு எரிந்தால் நாசமாக போவீங்க’ : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட  எம்எல்ஏ ஆவேசம்!!

அதிமுக தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இணைந்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “கடலூர் கிழக்கு மாவட்ட சேர்ந்த சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் பி .பன்னீர்செல்வம் , எம்.பெருமாள் , மார்ட்டின் லூயிஸ்,சௌந்தர், ராம்குமார் ஆகிய 6 பேரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

‘வயிறு எரிந்தால் நாசமாக போவீங்க’ : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட  எம்எல்ஏ ஆவேசம்!!

இந்நிலையில் இது குறித்து எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை வெளியிட்டோம். அதன் பிறகு தேர்தல் முடியும் வரை நாங்கள் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு ஊராக கோயில்களுக்கு சென்று இறைவனை பிரார்த்தித்து வந்தோம். ஊரில் இல்லாத நிலையில் கழகத்திற்கு எதிராக , எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நாங்கள் எப்படி பணியாற்ற முடியும்.நாங்கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதற்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், பண்ருட்டி தொகுதி மக்கள் அனைவருமே சாட்சி. அத்துடன் நான் வணங்கும் ஈசனும், அம்மாவின் ஆன்மாவும் சாட்சி. இப்படி இருக்கும் நிலையில் கழக வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அபாண்டமாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி எங்களை கழகத்தில் இருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது வேதனையை அளித்துள்ளது.

‘வயிறு எரிந்தால் நாசமாக போவீங்க’ : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட  எம்எல்ஏ ஆவேசம்!!

கடலூர் சம்பத் சொல்படி, வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . உளவுத்துறையை தன் கையில் வைத்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி காவல்துறையை கேட்டால் இதில் இருக்கும் உண்மை தெரியவரும் அல்லது எங்கள் தொகுதி கழகத்தினர் அழைத்து பேசியிருந்தால் கண்டிப்பாக உண்மை தெரிய வந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் பொய்யான பழியை சுமத்தி எங்களைப்போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகள் மனதை புண்படுத்தி உள்ளார்கள். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். இதை தொண்டர்களும் ,பொது மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கழக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூனியக்காரர்களான கடலூர் சம்பத் ,வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியனை ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் மன்னிக்காது.

உண்மையான கழக தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதககர்கள் விரைவில் நாசமாக போவார்கள். எந்த ஒரு தவறும் செய்யாத என்னை போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்து கொண்டே போனால் கழகத்தின் நிலை என்ன? பொறுத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.. இந்த செயல்பாடு விதி என்று இருப்போம். நல்லோருக்கு நல்லதே நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.